பொள்ளாச்சி பாலியல் வழக்கு.., கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.., கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாறி பிறகு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஆகஸ்ட் 13-ம் தேதி 9-வது நபராக அருண்குமார் என்பவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. அ.தி.மு.க பிரமுகரான முருகனாந்தம் என்பவரின் மூத்த மகன்தான் அருண்குமார்.

இந்நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

author avatar
murugan
Join our channel google news Youtube