பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் காட்சிப்பதிவுகளில் உள்ள பெண்களின் கதறல் நம் ஈரக்குலையை அறுக்கிறது!!!!நடிகர் சூர்யா !!!!

  • பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை பாலியல் வன்முறை செய்தது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
  • இந்நிலையில் நடிகர்  சூர்யா இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள  பிரபலமான நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தற்போது “உறியடி2 ” படத்தை தயாரித்தும் வருகிறார்.

 

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை பாலியல் வன்முறை செய்தது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த் சம்பவத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடித்தி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர்  சூர்யா இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.  அதில் அவர் “பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் காட்சிப் பதிவுகளில் உள்ள பெண்களின் கதறல் நம் ஈரக்குலையை அறுக்கிறது. மானம் காக்கும் வீரர்கள்’ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண்களையே தண்டிக்கிறார்கள். பாதிப்புக்கு ஆளான பெண்களுக்கு, இந்தச் சமூகத்தில் தொடர்ந்து வாழ்கிற தண்டனையைவிட, தற்கொலை என்கிற முடிவு தவறானது.துணிவு மிக்க பெண்ணாக’ மகளை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கும், என் செயலுக்கும் இடைவெளி இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது”  என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment