பொள்ளாச்சி விவகாரம்: விரைவில் உண்மை வெளியே வரும்- நக்கீரன் ஆசிரியர் கோபால்

தமிழகத்தை உலுக்கிய முக்கிய  சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்றுவருகிறது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், பொள்ளாச்சி சம்பவத்தில் பல அரசியல்வாதிகளுக்கு  தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.இதனால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையில் நக்கீரன் கோபால் மீது அவதூறு புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக  நக்கீரன் கோபால் இன்று  பெசன்ட் நகர் ராஜாஜி பவன் வளாகத்திலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக  சம்மன் அனுப்பியது சிபிஐ.இதையடுத்து நக்கீரன் கோபால் ஆஜரானார்.இதன் பின்னர் நக்கீரன் கோபால் கூறுகையில்,பொள்ளாச்சி விவகாரத்தில் சாட்சி அளித்தேன். சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment