ஜன..,31-ல் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்..!

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 நடைபெறுகிறது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 57 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் ஜனவரி 31 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan