சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது -கமல்ஹாசன் ட்வீட்

வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார்.தன்ராஜ் வீட்டில் நேற்று காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும்,காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.பின்பு சீர்காழி இரட்டைக் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் என்பவரை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால், வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

குழந்தைகளுக்கு AC பயன்படுத்துவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப  காற்றில் இருந்து …

19 mins ago

அந்த நடிகையால் கடும் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர்! அப்படி என்ன செஞ்சிட்டாரு?

M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…

35 mins ago

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…

55 mins ago

டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…

2 hours ago

செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் =300 ml அரிசி மாவு =1…

2 hours ago

விவிபேட் வழக்கு : உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும்… தேர்தல் ஆணையத்தின் விளக்கங்களும்…

VVPAT Case : EVM மிஷின்களில் ஒருமுறை மட்டுமே புரோகிராம் பதிவேற்ற முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தேர்தலில்…

2 hours ago