பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக காவல்துறை விசாரணை..!

பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார்.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  அதற்கான மனுவை நீதிமன்றத்தில் காவல்துறை இன்று தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்ற சந்தேகம் காவல்துறைக்கு எழுந்த நிலையில், இது தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.

அதற்காக நேற்று பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இரண்டு பேரையும் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் வீடியோ பதிவு மூலம்  செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை பள்ளி முதல்வரை மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பினார்.

பின்னர், பள்ளி முதல்வர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். பள்ளி முதல்வரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரியுமா..? அதேபோல பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ மற்றும் மெசேஜ்களை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் அனுப்பியது தொடர்பாக பள்ளி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்திருந்தது..?

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மீது முன்கூட்டியே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

murugan
Tags: PSBB

Recent Posts

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

1 hour ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

4 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

4 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

4 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

4 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

5 hours ago