“‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதனை நடத்துங்கள்”- போலீஸாருக்கு உத்தரவு…!

‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதிக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கு ஒரு அதிரடி  உத்தரவிடப்பட்டுள்ளது.அதாவது,’G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights’ என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்பதுதான்.

ஏனெனில்,ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.மேலும்,சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்துசொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர்.இதனால்,வாகனச் சோதனையின்போது இவர்கள் போலீஸாருக்கு முறையாக ஒத்துழைப்பதில்லை.இதன்காரணமாகவே,இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகள் வைத்து வரும் வாகனங்களை போலீஸாரும் சிலநேரங்களில் விட்டுவிடுகின்றனர்.

இதற்கிடையில்,இதுபோன்ற ஸ்டிக்கர் அல்லது போர்டுகள் வைத்துக் கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இந்நிலையில்,இதுபோன்ற போர்டுகள் வைத்துக் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி,சோதனை செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும்,இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலீஸாருக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘அ’ அல்லது ‘G’, Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

மேலும், S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பிஅலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.