பிரபல மலையாள நடிகரான விநாயகன், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் திமிரு படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில், பாஜவுக்கு எதிரான கருத்தை கூறியதால், சர்ச்சையில் சிக்கினார்.
இதனையடுத்து, நடிகர் விநாயகன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ஆபாசமாக பேசியதாகவும், சமூக ஆர்வலர் மிருதுளாவையும், அவரது தாயையும் விரும்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறியதாகவும், மிருதுளா கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்துள்ளனர்.