இன்றுடன் காவல் முடிவடைகிறது ! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்  ப.சிதம்பரம்

இன்றுடன் காவல் முடிவடைகிறது ! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்  ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரம் நீதிமன்றக்காவல் முடிவடைய உள்ள  நிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது .அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.காவல் முடிந்த நிலையில் சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.  ப.சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இன்றுடன் அந்த காவல் முடிவடைய உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Join our channel google news Youtube