சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்…!

சிறுவனை கொன்றதால் பெண் யானையையும், அதன் குட்டியையும் கைது செய்த போலீசார்.

பொதுவாக கொலை செய்யம் மனிதர்களை தான் காவல்துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், சிறையில் அடைப்பதுண்டு. ஆனால் அசாம் மாநிலத்தில் சிறுவனை கொன்றதற்காக, பெண் யானையையும், அதன் குட்டியையும் அசாம் போலீசார் கைது செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த வகையில், அசாம்  மாநில,கோலாகட் மாவட்டத்தில், சிறுவனை கொன்றதாக பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யானையின் உரிமையாளர், பெண் யானையையும், அதன் குட்டியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின் வனத்துறையினரிடம் யானைகளை ஒப்படைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.