லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் 2 பிளாட்களை வாங்கியுள்ளார். அதன் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா பகுதி மிகவும் பிரபலமானது. அங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் வசித்து வருகின்றனர்.
தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவும் இணைந்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 எதிரெதிர் பிளாட்களை வாங்கியுள்ளாராம். அந்த பிளாட்களின் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது.
வீடு வாங்கியதும் அடுத்த வேலையாக நயன்தாராவும், அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனராம். ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தமும் ஏற்கனவே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.