இணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை!

இணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை!

வங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர். 

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

இந்த புயலால், பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பலருடைய வீடுகளை மழைநீர் ஆக்கிரமித்துள்ள நிலையில், மாயாக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதற்கிடையில், சமுக வலைத்தளங்களில் நிவர் புயலை பற்றிய கவிதை தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த கவிதை,

‘நிவர் எங்கள் வீட்டில் இல்லை பவர்

எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை டவர்.

நீ வருண பகவானால் வந்த ஷவர்

உன்னுடைய வேகத்தால் வீழ்ந்து விடும் பழைய சுவர்

உன்னால் நனைந்தால் வந்துவிடும் பீவர்

உன்னை பற்றிய நியூஸ் கேட்டால் வருகிறது பியர்

உன்னால் எகிறுகிறது சுகர்

உன்னால் சாலையிலே ஓடுகிறது ரிவர்

உனக்கு இல்லை எவரும் நிகர்

எங்களை காப்பது இனி எவர்

நீ வேகமாக இங்கிருந்து நகர்

வராதே இங்கே நெவர்.’

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube