மைனர் பெண்ணின் முகத்தில் கேக் தடவிய ஆசிரியர் – போலீசார் போக்சோ வழக்குப் பதிவு..!

உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மைனர் பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் தடவிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு தொடக்க ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் 57 வயதான ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பயிலும் ஒரு மைனர் பெண் மாணவியை பிடித்து முகத்தில் கேக் தடவியுள்ளார்.அந்த மாணவி  தன்னை விடுவித்துக் கொள்ள போராடியுள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வைரல் வீடியோவில்,ஆசிரியர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து பின்னர் அவரது முகத்தில் கேக் பூசப்பட்டது.மேலும்,யார் உன்னைக் காப்பாற்றுவார்கள்? யாராவது வந்தார்களா? “,என்று ஆசிரியர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,சிறுமியின் தந்தையின் புகாரின் பேரில் ஆசிரியரை உள்ளூர் போலீசார் அழைத்துச் சென்று சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைத் தடுப்பதற்கான (போக்சோ) சட்டம் மற்றும் பிரிவு 354 (பெண்ணின் மீது அடக்குமுறையை சீர்குலைக்கும் நோக்கத்துடன்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதனால்,அவரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக,ராம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி), சன்சார் சிங் கூறுகையில், “ஆசிரியர் தினத்தன்று (செப்டம்பர் 5) இந்த சம்பவம் நடந்ததாக எங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த நிகழ்வு சிவில் லைன்ஸ் பகுதியில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரால் நடத்தப்படும் ஒரு பயிற்சி மையத்தில் நடந்துள்ளது.
சிறுமியின் தந்தை தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் மீது ஐபிசி பிரிவு 354 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சிறைக்கு அனுப்பப்பட்டார்”,என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பள்ளி முதல்வர், “இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நடக்கவில்லை. ஆசிரியரால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் ஆசிரியர் தினத்தையொட்டி இது நடந்தது. நாங்கள் அந்த வீடியோவை கவனித்து அவருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினோம்”,என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

5 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

6 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

7 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

8 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

8 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

9 hours ago