பாகிஸ்தான் பிரதமர் மனைவியின் தோழி தப்பியோட்டம்! 90,000 டாலர் மதிப்புள்ள பேக் வைரல்!

ஊழலுக்கு மத்தியில் மிக ஆடம்பரமான ஹாண்ட் பேக்வுடன் துபாய்க்கு தப்பி சென்ற இம்ரான் கானின் மனைவியின் தோழி.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் தோழி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது ஃபரா கான் தனது கால்களுக்கு அருகில் ஒரு பேக்யுடன் ஆடம்பரமாக பயணிக்கும் புகைப்படம் இதில் வைரலாகி வருகிறது. இருப்பினும், அவர் பயணம் செய்யும் தேதி தெளிவாக இல்லை. அவருடன் இருக்கும் பேக் 90,000 டாலர்கள் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் உறுப்பினர் ரோமினா குர்ஷித் ஆலம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, அந்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, இம்ரான்கான் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து அவரது மனைவியின் நெருங்கிய தோழியான பராக்கான் என்பவர் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் தோழி திடீரென பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர் மிக ஆடம்பரமான ஹாண்ட் பேக் ஒன்றை எடுத்து சென்றதாகவும், அதன் மதிப்பு 90,000 டாலர்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

42 mins ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

55 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

2 hours ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

3 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

3 hours ago