பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் இடைவெளி விட்டு இருக்கும் அமைச்சர்கள்!

 டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் இடைவெளி  விட்டு அமர்ந்துள்ளனர். 
 
உலகம் முழுவதும் கொரோனாவால்  பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் கொரோனாவின்தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும்  21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தார்.
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று தலைநகர் டெல்லியில் அவரச அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து அமராமல் இடைவெளிவிட்டு அமர்ந்துள்ளனர்.