29 C
Chennai
Wednesday, June 7, 2023

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு...

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

ரோஜ்கர் மேளா: 71,000 பேருக்கு இன்று பணி நியமன கடிதத்தை வழங்குகிறார் பிரதமர் மோடி.!

பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு அரசுத் துறைகளில் சேருபவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 71,000 பணி நியமனக் கடிதங்களை காணொளி வழியாக புதிய பணியாளர்களுக்கு வழங்க உள்ளார். ரோஜ்கர் மேளா திட்டம் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும், இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை, பிரதமர் மோடி 2.9 லட்சம் நபர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார்.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள் கிராமின் டாக் சேவக்ஸ், இன்ஸ்பெக்டர் ஆஃப் இன்ஸ்பெக்டர், கமர்ஷியல் கம்-டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளார்க்-கம்-டைப்பிஸ்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராக் மெயின்டனர், உதவி பிரிவு அதிகாரி, கீழ் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

இது போக, இன்று வழங்க இருக்கும் 71 ஆயிரம் பணிகளில், துணைப்பிரிவு அதிகாரி, வரி உதவியாளர்கள், உதவி அமலாக்க அதிகாரி, ஆய்வாளர்கள், நர்சிங் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரர், உதவி கணக்கு அதிகாரி, உதவி தணிக்கை அதிகாரி, பிரதேச கணக்காளர், தணிக்கையாளர், காவலர், தலைமை காவலர், உதவி கமாண்டன்ட், முதல்வர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர், உதவிப் பேராசிரியர் ஆகிய பணிகள் அடங்கும்.

ரோஜ்கர் மேளா திட்டம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த முன்முயற்சி இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.