பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதியுதவி.!

வருகின்ற 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் 18,000 கோடி ரூபாய் நிதிஉதவி திட்டத்தை துவக்கிவைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமரின் கிசான் திட்டம் :

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

நிதி உதவி :

அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். அதாவது , 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது 6 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் உரையாடுவார். விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பிரதமர்-கிசானுடனும், விவசாயிகளின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளிலும் பகிர்ந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்வார்.

போராட்டம்:

சமீபத்தில் மோடி அரசாங்கத்தால் இயற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த திட்டம் வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், நவம்பர் 26 முதல், டெல்லி-அம்பாலா, டெல்லி-ஹிசார், டெல்லி-காஜியாபாத் மற்றும் டெல்லி-நொய்டா வழித்தடங்களில் முறையே சிங்கு, திக்ரி, காசிப்பூர் மற்றும் சில்லா ஆகிய இடங்களில் உள்ள டெல்லியின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.