இன்னும் 5 ஆண்டுகளில் வலிமையான இந்தியா உருவாக்கப்படும்! பிரதமர் மோடி வெற்றி உரை!

பாஜகவின் பிரமாண்டமான தனிப்பெரும்பானமையுடனான வெற்றியை பாஜக தொண்டர்கள் சூழ டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் பேசினார்.அதில் பேசிய பிரதமர் மோடி, ‘ ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைப்பது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கானது இல்லை. இந்திய மக்களுக்கும், இந்திய குடியரசுக்கும் தான். இதனால் வெற்றிக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய மாயாக்களின் இச்செயலை உலக நாடுகளே வியந்து பார்க்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான இந்தியாவை உருவாக்க போராடுவேன்.தனி பெரும்பானமையுடன் ஆட்சி அமைந்திருந்தாலும் எங்களது ஆட்சி அனைவரையும் ஒன்று படுத்தி தான் இருக்கும் என தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment