நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் .

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது. அந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அதன் பிறகும் அடுத்தடுத்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் நாட்டுமக்களிடையே உரையாற்றினார்.

இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் 2ஆம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. ஊரடங்கின் இரண்டாம் கட்ட தளர்வுகளும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் உரை நிகழ்த்த உள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.