உத்திரகாண்ட்டிற்கு முதல் ரயில்… டெல்லிக்கு 6வது ரயில் சேவை.. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை..!

டோராடூன் முதல் டெல்லி வரை சென்றடையும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்து வருகிறார். ஏற்கனவே 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற வேளையில் 17வது வந்தே பாரத் ரயில் சேவை இன்றுஇயக்கப்படுகிறது .

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டோராடூனில் இன்று பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலை துவங்கி வைக்க உள்ளார். இந்த ரயில்சேவை, டோராடூன் முதல் டெல்லி வரை சென்றடையும். டெல்லிக்கு இந்த ரயில் சேவை 6வது வந்தே பாரத் ரயில். அதே நேரத்தில் உத்திரகாண்ட் மாநிலத்திற்கு முதல் வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.