மேற்கு வங்கத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஹூக்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தென்கிழக்கு ரயில் வேயின் 132 கி.மீ நீளமுள்ள கரக்பூர்-ஆதித்யாபூர் மூன்றாம் வரிசை திட்டத்தின் 30 கி.மீ நீளத்திற்கு கலைகுண்டா மற்றும் ஜார்கிராம் இடையேயான மூன்றாவது பாதையை திறந்து வைத்துள்ளார். இது 1,312 கோடி செலவில் அமைக்கப்பட்டது.
அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது கிழக்கு ரயில்வேயின் ஹவுரா பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில்வே விரிவாக்கத் திட்டத்தை, பிரதமர்தொடங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் அவர் முதலாவது சேவையைக் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். 4.1 கிலோமீட்டர் தொலைவிலான இந்த விரிவாக்க வழித்தடம் 464 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…