பொதுமுடக்கம் 5.0..? மீண்டும் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

பொதுமுடக்கம் 5.0..? மீண்டும் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்பொழுது இது நாளை (மே 31) ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், நாளை நடைபெறவுள்ள “மன் கி பாத்”நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதுகுறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube