கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடி.!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.

அப்போது, கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும், ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் முதல்வர், பிரதமரிடம் தொலைபேசியில் விளக்கமளித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.