அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி..?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 5,874,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 180,604 -பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு அவசர ஒப்புதல் அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவில் சக்திவாய்ந்த ஆன்டிபாடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கொரோனாவை விரைவாக எதிர்த்துப் போராடி, கொரோனா பாதிக்கப்படுவதிலிருந்து மக்களை பாதுகாக்க உதவும் என கூறப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் செயல்திறன் குறித்து இன்னும் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிலர் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என குறியுள்ளனர்.

டிரம்ப் அவசரகால அங்கீகாரத்தை அறிவிப்பார் என முந்தைய கடந்த அமெரிக்க செய்தி நிறுவங்களில் செய்தி வெளியானது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, ட்ரம்ப் செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னானி, ஜனாதிபதி “ஒரு பெரிய சிகிச்சை முன்னேற்றத்தை” அறிவிப்பார் என்றார்.

இந்நிலையில்,  டிரம்ப் ஒப்புதலை அறிவிப்பதாக அறிவித்த வாஷிங்டன் போஸ்ட், அமெரிக்காவில் 70,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை  கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது.

author avatar
murugan