பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டம்..?

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையறை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.