அடுத்த ஆண்டு 5 இலட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டம் -அமைச்சர் செங்கோட்டையன்   

நாகர்கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்   செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,  தமிழகத்தில் 16 ஆயிரம் உபரி ஆசிரியர்கள் உள்ளதால் அடுத்த ஆண்டு 5 இலட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது .  மத்திய அரசின் புதிய கல்வி திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவில்லை என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.