இன்று பினராயி தலைமையில் கூடுகிறது-அனைத்துக்கட்சிக் கூட்டம்!

கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.

அப்போது  இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,79,922 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 697 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.59 சதவிகிதமாக உள்ளது.

கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் மிககடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.மேலும்  மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha