திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்! காவல்நிலையத்தில் புகாரளித்த பிரபல நடிகை!

  • திருமணம் செய்வதாக கூறி பிக்பாஸ் தர்சன் என்னை ஏமாற்றி விட்டார்.
  • காவல்நிலையத்தில் புகாரளித்த சனம் செட்டி.

கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தர்சன் போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், பல கோடி மக்களின் மனதை வென்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிகழ்ச்சியின் போதே தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் இவர்கள் காதலுக்கு இடையே முறிவு ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை சனம் செட்டி சென்னை காவல்நிலையத்தில், தர்சன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும், தர்சனுக்கும், அவருக்கும் கடந்த வருடம் மே மாதம் நிச்சயம் நடைபெற்றதாகவும், ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வதால், திருமணத்தை தள்ளி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் தன்னுடைய பங்கும் உள்ளது என்றும், தர்சனுக்காக அவர் 15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube