வைரல் வீடியோ: ஒரு புறாவால் விமானம் 30 நிமிடங்கள் தாமதம்..!

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோ-ஏர் பயணிகள் விமானம்இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. விமானம் தாமதமாக காரணம்  புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைத்தது.

விமானத்தில் புகுந்த புறா அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது. அதை பயணிகள் வீடியோ எடுத்தனர். சிலர் அந்த புறாவை பிடிக்கவும் முயற்சி செய்தனர்.ஆனால் முடியவில்லை பின்னர் ஒரு வழியாக புறா விமானத்தில் இருந்து வெளியேறிய பிறகு விமானம் புறப்பட்டது.

விமானத்தில் எப்படி புறா வந்தது என தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk