திருமணத்திற்கு வேண்டி நடிகர் சிம்பு பரிகாரம்…? வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சிம்பு உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பத்து தல, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் காதலர் தினத்தன்று தனது செல்லப்பிராணியுடன் பேசியும் வீடியோவை நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாப்பாக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ மிகவும் வைரலானது, அதனை தொடர்ந்து தற்போது கையில் விளக்குடன் ஆற்றில் அந்த விளக்கை விடுவதுபோல் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் சிம்பு, உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசிக்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற கங்கை ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுள்ளார். கங்கை ஆற்றில் விளக்கேற்றி பரிகாரம் செய்யும் நடிகர் சிம்புவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் ஆக வேண்டிய பிராத்தனை செய்ய சென்றுள்ளதாக கூறி வருகிறார்கள், ஆனால் நடிகர் சிம்பு வழக்கம் போல் அணைத்து கோவில்களுக்கும் செல்வது போல் சென்று வரலாமே என்றும் குறிவருகிறார்கள். மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படங்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.