பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.அங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எத்தி ஏப்ரல் 15 ஆம் தேதி ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கினார்.

இந்நிலையில் தான் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு பிறகு ஃபைசல்க்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்தது.பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் உறுதியானது.இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.