2 நாட்களுக்கு பின் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம்…! அதிகரித்துள்ளதா…? குறைந்துள்ளதா…?

கடந்த 2 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 1 லிட்டர் பெட்ரோல் ரூ.92.90- ஆகவும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, 1 லிட்டர் டீசல் ரூ.86.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.