30-வது நாளாக எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல், டீசல் விற்பனை..!

இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வந்தது .பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே 5 ரூபாய் மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதில் எந்தவித மாற்றமும் இன்றி பெட்ரோல் ஒரு லிட்டர் 101.40 ரூபாய், டீசல் ஒரு லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 30 -வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி விர்க்கப்படுகிறது

author avatar
murugan