பேனர் வைக்க தடைகோரிய மனு தள்ளுபடி..!

தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டு இருந்த போது அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார்.அப்போது பின்னே வந்த லாரி சுபஸ்ரீ மீது ஏறியது.இதனால் சம்பவ இடத்திலே அவர்  உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர்  விழாக்கள் , பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து டிராபிக் ராமசாமி  தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அரசும் பேனர் வைக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசும் பேனர் வைக்க தடை கோரி  டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author avatar
murugan