ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு விசாரணை தள்ளி வைப்பு.!

ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் தள்ளி வைப்பு.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவான வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு  ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மே 31-ஆம் தேதி வரை ஆர் எஸ் பாரதிக்கு  தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

author avatar
Dinasuvadu desk