சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனு! சற்று நேரத்தில் வெளியாகவுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்க்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நெறிமுறை வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து, இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என சென்ற ஆண்டு, இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியானது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.