பொள்ளாச்சி வழக்கை மாற்றிய எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட,  கோவை எஸ்பி மற்றும் தமிழக உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் இது போன்று இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.அதனால் கோவை எஸ்பி மற்றும் அரசாணை வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வின் முன்னிலையில் வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment