கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜர்…!

கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜர்…!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொடநாடு சொத்து விவரங்கள் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ்க்கு சம்மன் அனுப்பியது.தற்போது பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *