இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் ரிசார்ட், ஹவுஸ் படகுகள் மற்றும் மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், தற்போது கேரளாவில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம் கேரள தினமான இன்று முதல் கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.