மதுரையில் மணல் தொழிற்சாலையை எதிர்த்து மக்கள் முற்றுகை போராட்டம் ..,

மேலூர்:  அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை  நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல்   எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம்  நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கிராம மக்கள் சார்பாக இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் நல்லபாகன் என்ற பாலகிருஷ்ணன் பல இடங்களில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் புகார் அளித்த இவர் மீது,  போலீசில் புகார் செய்தனர். போலீசார் இவரை விசாரணைக்கு அழைக்க, கிராம மக்கள் கோவம் அடைந்து  நேற்று மாலை தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment