மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் : எச்.ராஜா

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே.’ என கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், எச்.ராஜா அவர்கள், கமலஹாசன் ஒரு கிறிஸ்தவர் என்று கூறியுள்ளார். மேலும், ‘ கமல் தன்னை நாத்திகர் என்று கூறிக்கொண்டாலும், ஒரு தேவாலயத்தின் உதவியுடன் தான் கட்சி துவங்கியுள்ளார் என்றும், அவர் அண்ணன் இறந்த போது, கிறிஸ்தவ முறைப்படியே அடக்கம் செய்துள்ளனர்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment