எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள்.!

இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான  மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்.

இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த  சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

குறிப்பு:

முகத்தில் அதிக எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறைந்து, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

முகத்திற்கு சோப்பு போட்டு கழுவ பதில் கடலைமாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை நீங்கி பளபளப்பாக இருக்கும்.

முகத்தில் தயிரை பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவி வந்தால் எண்ணெய் பசை குறையும்.

காலை எழுந்ததும் வெள்ளரிக்காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

author avatar
murugan