நோய்த்தொற்றின் வரலாறு இல்லாதவர்களை விட, கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களிடையே இதய நோய்களை உருவாக்கும் ஆபத்து “கணிசமான அளவில்” அதிகமாக உள்ளது என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் SARS-CoV-2 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 4,131,717 பங்கேற்பாளர்களின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்கள், பெருமூளை இரத்த நாள நோய், பக்கவாதம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உள்ளிட்ட அரித்மியா தொடர்பான கோளாறுகள், மாரடைப்பு போன்ற இதய நோய்கள், இஸ்கிமிக் கார்டியோமயோபதி போன்ற இஸ்கிமிக் இதய நோய், இதய செயலிழப்பு போன்ற பிற இதய கோளாறுகள் மற்றும் த்ரோம்போம்போலிக் கோளாறுகள் (இரத்த உறைவு) போன்ற நோய்கள் வரும் அபாயங்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய்கள் தொடர்பான விளைவுகளில் கோவிட்-19 இன் தாக்கம் வெளிநோயாளிகளைக் காட்டிலும் உள்நோயாளிகளில் (தொற்றுநோய் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள்) அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, “கோவிட்-19 இன் வரலாற்றைக் கொண்டவர்கள் நீண்டகாலம் தங்கள் இருதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுறுத்துகிறது.