பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற மக்கள்…! வீடியோ உள்ளே…!

மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற பொதுமக்கள்.

பொதுவாக நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், வண்டி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களை பொதுமக்கள் தள்ளிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய சம்பவத்தை நாம் இதுவரையில் எங்கும் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட வினோத சம்பவம்  ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் அங்குள்ள பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலை கைகளால் தள்ளி சென்றன. ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் பெட்டியை மக்கள் கைகளால் தள்ளி சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு, இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 100 அடி நீள மைசூர் பாகு

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.