மக்களே….! இன்று வானில் நிகழவிருக்கும் அதிசயம்…..! மிஸ் பண்ணிராதீங்க…!

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும்.

சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும். அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது இன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை வானில் தோன்றும் என்றும், கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மிக நீண்ட சந்திர கிரகணமாக இருக்கும் இந்த கிரகணத்தை, இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். இந்த கிரகணத்தின் போது நிலவானது அடர்த்தியான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.மேலும்,முழு நிலவு பூமியின் நிழலுக்குள் நுழையும் போது, அது பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

ஏனெனில் பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் போது வளிமண்டல ஒளிச் சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே நிலவின் நிறம் ரத்தச் சிவப்பாக மாறும். இதனை ஆங்கிலத்தில் “Blood Moon” என்று அழைக்கின்றனர். இதனால், 2021 ஆம் ஆண்டின் வானியல் அதிசயமாக இந்த சந்திர கிரகணம் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.