‘மக்களே இப்படி சொல்லாதீர்கள்’ – கடலூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த தீயணைப்பு துறை வீரர்கள்..!

ழைக்கும் போது ‘பிறகு வருகிறேன்’ என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில்,  பல மாவட்டங்கள் தொடர்ந்து விடாது பெய்து வருவதால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதோடு, வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை, தீயணைப்புத்துறையினர் படகு மூலம் மீட்டு வருகின்ற்னர். இதில் சிலர் கொஞ்ச நேரம் கழித்து வருகிறோம், வரவில்லை என்று பதில் கூறுகின்றனர். இதனால், மக்கள் மறுப்பு தெரிவிக்காமல், அழைக்கும் போது வந்துவிட வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மழை வெள்ளம் அதிகரிக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது. எனவே, அழைக்கும் போது ‘பிறகு வருகிறேன் என்று கூற கூடாது என கடலூர் மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.