சென்னை கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 2019 ம் ஆண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்

சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் குவிந்த மக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இனிப்புகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடினர். சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும் சிறப்பு பிரார்த்தனை செய்தும் புத்தாண்டை வரவேற்றனர். அதேபோல நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் திரண்ட இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

கோவையிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் 2019 ஐ வரவேற்றனர். மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் இரவு முதலே இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment