பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மக்களை காப்பாற்ற முடியாது-ஈஸ்வரன்..!

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இலவசங்களை கொடுத்தும் என்ன பயன் என ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார். 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் டீசல் பெட்ரோல் விலையை  குறைக்காமல் ஏழை மக்களை காப்பாற்ற முடியாது. பெட்ரோல், டீசல் விலையை பற்றியோ அல்லது கேஸ் விலையை பற்றியோ முதலமைச்சர் எங்குமே பேசியது கிடையாது.

அது ஏதோ பிரச்சனை இல்லாத போல அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் டீசல், பெட்ரோல் மற்றும் கேஸ் விலையை குறைக்காமல் மக்களை காப்பாற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

author avatar
murugan