காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும்போது சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறது ஓய்வுக்குப் பின் இந்த நாய்கள் அல்லது குதிரைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அவற்றை தத்தெடுக்க விரும்பும் அவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன.
பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வேண்டுகோளின் பேரில் இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்தது. இந்த சட்டத்தின்கீழ் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலந்து நாட்டின் உள்துறை அமைச்சர் மோரிஸ் கம்மின்ஸ்கி கூறுகையில், இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த திட்டமானது இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இந்த திட்டமானது சட்டமாக்கபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…