இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பவீனா படேல்..!

அரையிறுதி போட்டியில் சீனா வீராங்கனையை வீழ்த்தி பவீனா படேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவீனா படேல், பட்டேல் ஜாய்ஸ் டி ஒலிவியராவுடன் நேற்று மோதினார். அப்போட்டியில் பவீனா படேல் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக் ரன்கோவிக்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். செர்பியாவை 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவீனா படேல் அரையிறுதிக்கு முன்னேறினார்.  இந்நிலையில், இதன்பின் நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவீனா படேல் 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதனால், இந்தியா தங்கபதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது.

author avatar
murugan